search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூரில் குட்கா விற்ற 3 பேர் கைது
    X

     ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தபோது எடுத்தபடம்.

    பரமத்திவேலூரில் குட்கா விற்ற 3 பேர் கைது

    பரமத்திவேலூரில் குட்கா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரனவீரன் தலைமையில் ‌‌‌‌‌‌வேலூர் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் நேற்று பரமத்திவேலூர் சந்தை பேட்டை, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை, மளிகை கடை மற்றும் பெட்டிக்கடை திடீரென சோதனை மேற்கொண்டனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா‌ புகையிலை பொருட்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பரமத்திவேலூர் , சந்தை பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (வயது 40), உழவர் சந்தை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (44) மற்றும் கரூர் மாவட்டம், புகளூர், ராம்நகரை சேர்ந்த சுப்ரமணியன்(56) ஆகிய 3 பேரை பரமத்திவேலூர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 300 குட்கா புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×