search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் இருசக்கர வாகனங்கள் திருடிய 3 பேர் கைது
    X

    கைதான 3 பேர்

    கொடைக்கானலில் இருசக்கர வாகனங்கள் திருடிய 3 பேர் கைது

    • கொடைக்கானலில் மோட்டார் சைக்கிள்கைள திருடிய 3 மதுரை வாலிபர்கள் கைது
    • பைக் திருடிய மதுரை வாலிபர்கள் கைது

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன் லாஸ்காட் ரோடு பகுதியில் சலேத் ஆண்டனி மேரியோ என்பவரது பல்சர் இருசக்கர வாகனம் திருடு போனது. அதேநாளில் பெருமாள்மலை–ப்பகுதி–யிலும் ஒரு பல்சர் வாகனம் திருடுபோனது. இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இதனையடுத்து கொடைக்கானல் டி.எஸ்.பி. சீனிவாசன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் மதுரையை சேர்ந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 பல்சர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை கரிசல்குளத்தை சேர்ந்த ஆதிகேசவன், திருப்பரங்குன்றத்தை சேர்ந்த நவீன், கவிதாநகரை சேர்ந்த முத்துராமலிங்கம் ஆகிய 3 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அைடத்தனர்.


    Next Story
    ×