search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் 29-ந்தேதி தபால் துறை குறைதீர்க்கும் கூட்டம்
    X

    சேலத்தில் 29-ந்தேதி தபால் துறை குறைதீர்க்கும் கூட்டம்

    • சேலம் தலைமை தபால் துறை கிழக்கு கோட்ட முதுநிலை கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் கோட்ட அளவில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
    • இக் கூட்டம் 29-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

    சேலம்:

    சேலம் கிழக்கு கோட்ட தபால் துறை முதுநிலை கண்காணிப்பாளர் அருணாச்சலம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் தலைமை தபால் துறை கிழக்கு கோட்ட முதுநிலை கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் கோட்ட அளவில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் அனைவரும் தபால் துறை சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றிய புகார்களை குறைதீர்க்கும் நாளன்று நேரிலோ அல்லது சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலக முகவரிக்கு 26-ந் தேதிக்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். புகாரின் தபால் உறையில் குறைதீர்க்கும் கூட்டம் என்பதை குறிப்பிட்டு எழுத வேண்டும். மணியார்டர், வி.பி.பி., வி.பி.எல்., பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார்கள் என்றால் அனுப்பிய தேதி, முழு முகவரி, பதிவு அஞ்சல் எண், அலுவலகத்தின் பெயர் அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகார்கள் என்றால் கணக்கு எண், பாலிசி எண், வைப்பு தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட தொகை விவரங்கள் அல்லது வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×