search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் 28-ந்தேதி அன்பில் பொய்யாமொழி உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை
    X

    திருச்சியில் 28-ந்தேதி அன்பில் பொய்யாமொழி உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை

    • முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான, அன்பில் பொய்யாமொழி அவர்களின் 23-ம் ஆண்டு நினைவு தினம் வருகிற 28-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.
    • இந்நிகழ்வில் மாவட்ட, மாநில நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

    திருச்சி,

    திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், திராவிட இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கத்தின் புதல்வரும், தி.மு.க. இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான, அன்பில் பொய்யாமொழி அவர்களின் 23-ம் ஆண்டு நினைவு தினம் வருகிற 28-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், அவரது திருவுருவப்படத்திற்கு வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணி அளவில் கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்படுகிறது.

    இந்நிகழ்வில் மாவட்ட, மாநில நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×