என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2,61,610 நோயாளிகள் பயன் பெற்றனர்
- ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2,61,610 நோயாளிகள், குறித்த நேரத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு பயன் அடைந்து உள்ளனர்.
- மேலும் சாலை விபத்துகளில் 48,371 பேரும், பிரசவத்திற்காக 88,121 பேரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.
சேலம்:
சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2,61,610 நோயாளிகள், குறித்த நேரத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு பயன் அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை மேலாளர் குமரன் கூறுகையில், கடந்த ஆண்டு மட்டும் தர்மபுரி 38,413, ஈரோடு 57472, சேலம் 81,090, நாமக்கல் 36,203, கிருஷ்ணகிரி 48430 என மொத்தம் 2,61,610 நோயாளிகள் ஆம்புலன்ஸ் சேவை மூலம் பயனடைந்து உள்ளனர். மேலும் சாலை விபத்துகளில் 48,371 பேரும், பிரசவத்திற்காக 88,121 பேரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.
இதில் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்களை அழைத்து வரும்போது, ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே 365 கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்பவர்களுக்கு, குறைந்தபட்சம் 13 நிமிடங் களில் சம்பவ இடத்திற்கு சென்று விடுவதாகவும் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்