என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குஜிலியம்பாறை அருகே மனமகிழ் மன்றத்தில் சூதாடிய 23 பேர் கைது
    X

    பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்.

    குஜிலியம்பாறை அருகே மனமகிழ் மன்றத்தில் சூதாடிய 23 பேர் கைது

    • எரியோடு இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையில் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
    • சூதாட்ட கும்பலிடம் இருந்து ரூ.21200 மற்றும் 12 பைக்குகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குஜிலியம்பாறை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை, குஜிலியம்பாறை, எரியோடு, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் சூதாட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டு சூதாட்ட கும்பலை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் குஜிலியம்பாறை அருகே காளப்பட்டியில் உள்ள மன மகிழ்மன்றத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து எரியோடு இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையில் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பணம் வைத்து சூதாடிய 23 பேரை கைது செய்தனர்.

    மன மகிழ்மன்றத்தின் உரிமையாளர் டென்சிங் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். சூதாட்ட கும்பலிடம் இருந்து ரூ.21200 மற்றும் 12 பைக்குகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×