என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறை தீர்க்கும் நாள்  கூட்டத்தில் 211 மனுக்கள் பெறப்பட்டன
    X

    குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 211 மனுக்கள் பெறப்பட்டன

    • மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 211 மனுக்களை வழங்கினார்கள்.
    • மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் மனுக்களின் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது.

    இதில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 211 மனுக்களை வழங்கினார்கள்.

    அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் மனுக்களின் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×