search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    காரைக்கால் திருநள்ளாறில் மீன்குட்டையில் மோட்டார் திருட்டு- 2 பேர் கைது

    மீன்குட்டையை சுற்றியுள்ள செடி, மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, மீன்குட்டை ஓரம் ரூ.16 ஆயிரம் மதிப்பிலான மின் மோட்டாரை உத்தண்டி வைத்துள்ளார்.
    காரைக்கால்:

    காரைக்காலை அருகே திருநள்ளாறு சுரக்குடி மெயின் சாலையில், காரைக்கால் பொதுப்பணித்துறையில் எம்.டி.எஸ்.ஆக பணியாற்றி வருபவர் உத்தண்டி. இவர் மீன் குட்டை ஒன்றை பராமரித்து வருகிறார்.

    இந்த மீன்குட்டையை சுற்றியுள்ள செடி, மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, மீன்குட்டை ஓரம் ரூ.16 ஆயிரம் மதிப்பிலான மின் மோட்டாரை உத்தண்டி வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று இரவு, வழக்கம்போல், மீன்குட்டையை நண்பர் மகாலிங்கம் என்பவருடன், உத்தண்டி பார்வையிட சென்றபோது, நீர் மோட்டாரை 4 பேர் திருடிசெல்வது தெரியவந்தது.

    தொடர்ந்து, நண்பர் உதவியுடன், நீர் மோட்டாரை திருடிசென்ற திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த மனோகர்(வயது35), ஜானகிராமன்(34), கருணாநிதி(34), ராஜேந்திரன்(37) ஆகிய 4 பேரில், மனோகர் மற்றும் ஜானகிராமனை, கையும் களவுமாக பிடித்து, நீர் மோட்டாரை பறிமுதல் செய்தார். மற்ற 2 பேர் தப்பியோடிவிட்டனர்.

    தொடர்ந்து, கையும் களவுமாக பிடித்த 2 பேரையும், உத்தண்டி திருநள்ளாறு காவல்நிலையத்தில் ஒப்படைத்து, தப்பியோடிய மற்ற 2 பேரையும் பிடித்து, 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, 2 பேரை கைது செய்து, தலைமறைவான மற்ற 2 பேரை தேடிவருகின்றனர்.
    Next Story
    ×