என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோம்பட்டு கிராமத்தில் நடந்த கலந்துரையாடலில் மத்திய மந்திரி மீனாட்சி லேகி கிராம மக்களோடு பேசினார்.
    X
    சோம்பட்டு கிராமத்தில் நடந்த கலந்துரையாடலில் மத்திய மந்திரி மீனாட்சி லேகி கிராம மக்களோடு பேசினார்.

    பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் இல்லை - மத்திய மந்திரி மீனாட்சி லேகி பெருமிதம்

    பா.ஜனதா ஆட்சியில் ஊழல் இல்லை என்று மத்திய மந்திரி மீனாட்சி லேகி பெருமிதம் அடைந்துள்ளார்.
    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு தொகுதி சோம்பட்டு கிராமத்தில், மத்திய பா.ஜனதா அரசின் 8 ஆண்டு கால மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான  கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

    அமைச்சர் நமச்சிவாயம், மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை இணை  மந்திரி அமைச்சர் மீனாட்சி லேகி கலந்து கொண்டு பேசியதாவது:- 

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கும்,  ஏழை களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின் ஏழை மக்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வங்கிகளில் கணக்குகள் தொடங்கியுள்ளனர்.

    அதன் மூலம் மத்திய அரசின் இன்ஸ்சூரன்ஸ், பென்ஷன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கொரோனா காலங்களில் ஏழை மகளிர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது.பெண்களின்  மேம்பாட்டுக் காக உழைப்பவர் பிரதமர் மோடி மட்டுமே. கிராமப் புறங்களில் உள்ள அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் பெண்களை தலைவராக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

    பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல் நடக்கக் கூடாது என்பதற்காக பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுவதால், ஊழல், லஞ்சம் முற்றிலும் கிடையாது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவக்  காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. இந்தியா தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக 20 கோடி கழிப்பிடம் பெண்களுக்காக கட்டப்பட்டுள்ளது. 

    பொது சேவை மையங்களின் மூலம் மத்திய அரசின்  அனைத்து திட்டங்களையும் மக்கள் நேரடியாக பெறக்கூடிய வகையில் மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. பிரதமர் கூறியபடி, புதுவை  விரைவில் பெஸ்ட் புதுவையாக நிச்சயம் மாறும். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    நிகழ்ச்சியில், செல்வ கணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அசோக் பாபு, சிவசங்கரன், நிர்வாகிகள் முத்தழகன், தமிழ்மணி, வீரராகவன், செல்வகுமார், கலியபெருமாள், கண்ணன், மோகன்குமார், செல்வம்,  சிவா, தீனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×