என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
செல்போன் பறித்த தொழிலாளி கைது
தப்பி ஓட முயன்றவரை மடக்கி பிடித்தனர்.
கோவை:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கவுண்டம்பள்ளியை சேர்ந்தவர் டிக் விஜய் (வயது 22). இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் லேப் டெக்னிசியனாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஆஸ்பத்திரி முன்பு நின்று கொண்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் திடீரென டிக் விஜயின் செல்போனை பறித்து தப்பிச் சென்றார். இதில் அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.
இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பி ஓட முயன்றவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பொள்ளாச்சியை சேர்ந்த சசிகுமார் என்ற சசி (47) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






