search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் கொள்முதல் நிலையம் அமைக்க பூமிபூஜை போடப்பட்டது.
    X
    நெல் கொள்முதல் நிலையம் அமைக்க பூமிபூஜை போடப்பட்டது.

    நெல் கொள்முதல் நிலையம் அமைக்க பூமிபூஜை

    வேதாரண்யம் தாலுக்கா வண்டுவாஞ்சேரியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க பூமிபூஜை போடப்பட்டது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வண்டுவாஞ்சேரியில்நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்திர கட்டிடம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது

    விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி குமார் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் வைத்தியநாதன். கோமதி. தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    நிகழ்ச்சியில் ஒன்றிய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன். வழக்கறிஞர் சீனிவாசன் மற்றும்கிராம மக்கள் கலந்து கொண்டனர். 

    வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதற்கு நிரந்தர கட்டிடம் கட்ட பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.27 லட்சத்தில் நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி அனுமதி அளித்தார். 

    முடிவில் ஊராட்சி செயலாளர் குமரவேல் நன்றி கூறினார்.

    Next Story
    ×