search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    ராயபுரத்தில் 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

    ராயபுரத்தில் 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    ராயபுரம், பி.வி. கோவில் தெருவில் எண்ணை கடை மற்றும் மளிகை கடை நடத்தி வருபவர் ஜெயபிரகாஷ். இரவில் இவரது கடையின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம கும்பல் ரூ.50ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.

    இதேபோல் ஆதாம்சாகிப் தெருவில் 2 மளிகை கடையை உடைத்து ரூ.16 ஆயிரம் ரொக்கம், பொருட்கள் மற்றும் அதே பகுதியில் உள்ள செல்போன் கடையை உடைத்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்கள், சார்ஜர், ஹெட்போன் ஆகியவற்றையும் மர்மகும்பல் சுருட்டி சென்று இருந்தனர்.

    இதில் எண்ணை கடை அருகே பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு  கேமிராவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபடுவது பதிவாகி உள்ளது. இதனை வைத்து ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×