என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.
கூட்டுறவு பால் சங்கம் ஏற்படுத்த கூட்டத்தில் தீர்மானம்
தலைஞாயிறில் கூட்டுறவு பால் சங்கம் ஏற்படுத்த வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம்தாலுக்கா தலைஞாயிறு பேரூராட்சி யின் கூட்டம் நடைபெற்றது. தலைவர் செந்தமிழ்ச்செல்வி பிச்சையன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் குகன், துணைத் தலைவர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலை ஞாயிறு பகுதியில் உள்ள பொதுமக்கள் பத்திர ப்பதிவு செய்ய, சிட்டா அடங்கல் எடுக்க 8 கிலோமீட்டர் தொலை விலுள்ள திருப்பூண்டி செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்.தலைஞாயிறு பேரூரா ட்சியில் மீன், இறால் விற்பனை கூடம் அமைக்க வேண்டும். பேரூராட்சி பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் நலன் கருதி பால் கூட்டுறவு சொசைட்டி தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சியாக மாற்ற முற்றிலும்பி ளாஸ்டி க்கை தவிர்ப்ப தற்காக கூட்டத்தில் உலோக த்திலான பாட்டில்களில் தண்ணீர் மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பேப்பர் கப்பிற்கு பதிலாக பீங்கான் கோப்பை பயன்படுத்தப்பட்டது. முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் குமார் நன்றி கூறினார்.
Next Story






