search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    புதுச்சேரி:

    வில்லியனூரில் தர்மபால சோழ மன்ன ரால் கட்டப்பட்ட திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. 

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ தேர் திருவிழா 10 நாட்கள் நடக்கும். இந்த ஆண்டு தேர் திருவிழா தொடங்குகிறது. 

    இதையொட்டி கடந்த 5 நாட்களாக பிடாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆடு பலிகொடுக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது.  7.30 மணி முதல் 8.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. 

    தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. 10-ந் தேதி திருக்கல்யாணம்,  11-ந் தேதி தேரோட்டம்,  12-ந் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது. 

    விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர். 

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×