என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    விபத்தில் தொழிலாளி பரிதாப சாவு

    மொபட் மீது கார் மோதியது
    கோவை,
    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள ஜக்கார்பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 55). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் பொள்ளாச்சி- பல்லடம் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சின்னசாமி சம்பவஇடத்திலேயே துடி,துடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    Next Story
    ×