என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    கடலூரில் விஷம் குடித்து மயங்கி விழுந்த போலீஸ்காரர்

    செல்வக்குமாரின் நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மதுவானை மேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 27). இவர் உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று கடலூர் நீதிமன்ற சாலையில் திடீரென மயங்கி விழுந்தார். அப்போது பாதுகாப்புக்கு இருந்த போலீஸ்காரர்கள் செல்வக்குமாரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விசாரணையில் போலீஸ்காரர் செல்வக்குமார் விஷம் குடித்தது தெரியவந்தது. இதனை அறிந்த கடலூர் 3-வது மாஜிஸ்திரேட்டு ரகோத்தமன் நேரில் சென்று வாக்குமூலம் பெற்றார்.

    முன்னதாக செல்வகுமார் போலீசாரிடம் தெரிவித்ததாவது:-

    குடும்ப செலவுக்காக ஒரு பெண்ணிடம் வட்டிக்கு செல்வக்குமார் பணம் வாங்கியிருந்தார். வட்டிக்கு கொடுத்த பெண் அவரிடம் அடிக்கடி பணம் கேட்டார். இதன் மனஉளைச்சல் காரணமாக செல்வக்குமார் விஷம் குடித்துள்ளார். மேற்கண்டவை விசாரணையில் தெரியவந்தது.

    செல்வக்குமாரின் நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    Next Story
    ×