search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவிழா கொடியேற்றம் நடைபெற்ற காட்சி.
    X
    திருவிழா கொடியேற்றம் நடைபெற்ற காட்சி.

    பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

    பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
    வீ. கே. புதூர்:

    பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று  கொடியேற்றத்துடன் தொடங்கியது.  

    முன்னாள் பாளை மறை மாவட்ட  ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து மாலை ஆராதனையை நடத்தினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழா தொடர்ந்து வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெப மாலையும், நவநாட்திருப்பலி, மறையுரை,  நற்கருணை ஆசீர் நடக்கிறது. 12-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருப்பலியும், இரவு 7.30 மணிக்கு புனித அந்தோணியார் திருவுருவ பவனி நடைபெறுகிறது.

    திருவிழா நிறைவு தினமான திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி கலந்து கொண்டு ஆராதனையையும், திருவிழா கூட்டு திருப்பலியையும்  நடத்தி வைக்கிறார். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜேம்ஸ், அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×