search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    17 வயது சிறுவளை தாக்கிய அண்ணன்- தம்பி கைது

    மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்று 17 வயது சிறுவளை தாக்கிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை முனிசிபல் காலனி கல்யாண் நகரை சேர்ந்த 17 வயது சிறுவன். இவருக்கும் மேல் அலங்கத்தைசேர்ந்த சரத்குமார் (28), அவரது தம்பி மதன்குமார்(22) மற்றும் கிரிதரன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று சிறுவன் தஞ்சை மேலவீதி அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். 

    அப்போது அங்கு வந்த சரத்குமார் உள்ளிட்ட 3 பேரும் சிறுவனை தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தூக்கினர்.
    பின்னர் சிறிய தூரம் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவாறே சிறுவனை சரமாரியாக தாக்கி விட்டு தள்ளி விட்டு சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த சிறுவன் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரி ன்பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்குமார், அவரது தம்பி மதன் குமாரை கைது செய்தனர். கிரிதரனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×