search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விமானம்
    X
    விமானம்

    தட்டுப்பாடு எதிரொலி- சென்னை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி செல்லும் இலங்கை விமானங்கள்

    மே மாதம் 27-ந் தேதி இலங்கையில் இருந்து மெல்போர்ன் சென்ற விமானம் சென்னை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி சென்றது.
    ஆலந்தூர்:

    இலங்கையில் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. மேலும் அங்கு அடிப்படை தேவைகளுக்கே பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெட்ரோல், டீசல், கியாஸ் மற்றும் உணவு பொருட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.

    இந்த நிலையில் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் எரிபொருள் நிரப்புவதிலும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்தநாட்டு விமானங்களில் நிரப்புவதற்கு போதுமான எரிபொருள் இல்லை. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் இலங்கையில் இருந்து மெல்போர்ன், சிட்னி, டோக்கியோ போன்ற வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கு வழியில் சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்கான உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தொகையை இலங்கை விமான நிறுவனங்கள் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து மே மாதம் 23-ந் தேதி கொழும்பில் இருந்து டோக்கியோ சென்ற 297 இருக்கைகள் கொண்ட பெரிய இலங்கை விமானம் சென்னை விமான நிலையத்தில் சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அதற்கு வேண்டிய எரிபொருளை நிரப்பியது. பின்னர் அந்த விமானம் மீண்டும் டோக்கியோ புறப்பட்டு சென்றது

    இதேபோல் மே மாதம் 27-ந் தேதி இலங்கையில் இருந்து மெல்போர்ன் சென்ற விமானம் சென்னை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி சென்றது.

    மே மாதம் 27-ந் தேதி இலங்கையில் இருந்து பிராங்பேர்ட் மற்றும் சிட்னிக்கு சென்ற விமானம் திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு சென்றது. இலங்கையில் இருந்து 357 கி.மீட்டர் தூரத்தில் இந்த விமான நிலையம் உள்ளதால் அங்கும் இலங்கை விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படுகிறது.

    இதற்கிடையே விமான நிலைய இயக்குனரகம் விமான நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து அங்கு செல்லும் விமானங்களில் தேவையான எரிபொருளை டேங்கரில் நிரப்பிக் கொண்டு செல்லுமாறும், இலங்கையில் எரிபொருள் நிரப்புவதை தவிர்க்கும் வகையிலும் செல்லும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×