search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவை அண்ணா சாலையில் ஆம்ஆத்மி கட்சி போராட்டம் நடத்திய காட்சி.
    X
    புதுவை அண்ணா சாலையில் ஆம்ஆத்மி கட்சி போராட்டம் நடத்திய காட்சி.

    ஆம்ஆத்மி கட்சி நூதன போராட்டம்

    ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய கோரி ஆம்ஆத்மி கட்சி நூதன போராட்டம் நடத்தினர்
    புதுச்சேரி:

    ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய கோரி ஆம்.ஆத்மி கட்சியினர் புதுவை அண்ணாசாலையில்  அரை நிர்வாணத்துடன் நூதன போராட்டம் நடத்தினர். 

    பின்னர் புதுவை ஆம்.ஆத்மி கட்சியின் செயலாளர் ஆலடிகணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு இளைஞர்களிடம் பரவி வருகிறது. படித்த இளைஞர்கள் ஆன்லைனில் சொந்த பணத்தை செலவிட்டும், கடன் வாங்கியும், மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும் விளையாடுகின்றனர். 

    இதனால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்கின்றனர். இப்பிரச்சினையை உணராமல் மத்திய, மாநில அரசுகள் மவுனம் காக்கிறது. 

    புதுவை சட்டசபையில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும் சட்டத்தை இயற்ற வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ரவிசீனிவாசன், சண்முகசுந்தரம், பூபேஷ் ராஜன், கண்ணபிரான், சுத்தம் சுந்தர்ராஜன், ஜெயராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×