search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அண்ணாதுரை எம்.பி., சரவணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
    X
    அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அண்ணாதுரை எம்.பி., சரவணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    கலசப்பாக்கம் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

    கலசப்பாக்கம் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட கேட்டவரம்பாளையம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையம் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் அண்ணாதுரை எம் பி கலசப்பாக்கம் தி.சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் மையத்தை திறந்து வைத்தனர். 

    அப்போது வழியில் வரும் போது சிறுவள்ளூர் கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி எம்பி எம்எல்ஏ காரை மரித்து புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில் கடந்த 15 வருடங்களாக ஏரிக் கரையின் ஓரம் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம்.

    தற்போது இந்த வீட்டை காலி செய்யச் சொல்லி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மனு அனுப்பியுள்ளனர். எங்களுக்கு வேறு இடம் இல்லை நாங்கள் எங்கே செல்வது என்று அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புகார் மனு கொடுத்தனர்.
    Next Story
    ×