search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை
    X
    மதுரை

    மதுரையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

    மதுரையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகளை மதுரை மேற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.
    மதுரை

    மதுரை சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி துணை மின் நிலையங்களில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (2-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். பெரியார் பஸ் நிலையம், டி.பி.கே.ரோடு ஒருபகுதி, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு,மேலமாசி வீதியின் ஒரு பகுதி, நன்மை தருவார் கோவில், மேலவடம்போக்கி தெரு, ஹயாத்கான் சாலை, மேலவாசல் ஹவுசிங் போர்டு, மேல வாசல் மரக்கடை பகுதிகள், ஹீரா நகர், திடீர் நகர். 

    பந்தடி 1 முதல் 7-வது தெருக்கள், மகால் 3 முதல் 7-வது தெருக்கள், பால் மால் குறுக்குத்தெரு, தெற்குமாசி வீதியில் சில பகுதிகள், மஞ்சனக்காரத் தெருவின் சில பகுதிகள், மகால் ஏரியா, பேலஸ் ரோடு, விளக்குத்தூண் பகுதிகள், நவபத்கானா தெரு, 10 தூண் சந்து ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை எஸ்.எஸ்.காலனி உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வானமாமலைநகர், வேல்முருகன் நகர், துரைசாமி நகர், ராம்நகர், சிருங்கேரி நகர், பைபாஸ் ரோடு, அரிஸ்டோ மருத்துவமனை, சத்தியமூர்த்தி நகர், வ.உ.சி.தெரு, நேரு நகர், போடிலைன், கிரீன் லீவ்ஸ் அபார்ட்மெண்ட், ஜெய்நகர், தானத்தவம்ரோடு, மீனாட்சி நகர், அனீஸ் கான்வென்ட், ஜீவனா பள்ளி, ராஜம் நகர், ராகவேந்திரா நகர், எம்.எம்.நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மதுரை மேற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×