என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுச்சேரியில் சுட்டெரிக்கும் வெயில்

    புதுவையில் அக்னி நட்சத்திரத்துக்கு பிறகும் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த பிப்ரவரி முதல் கோடை வெயில் வாட்டி வருகிறது.

    சில மாதமாக ரோட்டில் நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் தகித்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கியபோது புதுவை மக்கள் மிகுந்த அச்சம் கொண்டனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அக்னி நட்சத்திர காலத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்தது. 

    இதனால் வறண்ட வானிலை மாறி குளிர்ந்த காற்றும் வீசியது. அக்னி நட்சத்திர காலத்தில் ஓரளவு மக்கள் தப்பிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அக்னி நட்சத்திரம் முடிந்துள்ள நிலையில் தற்போது புதுவையில் கடும் வெப்பம் நிலவுகிறது. 

    கடந்த 2 நாட்களாக வெயில் தகித்து வருகிறது. பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் சிரமப்படுகின்றனர். வாகனத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூட முடியாத நிலை நிலவியது. இருப்பினும் வானிலை மையம் முன்கூட்டிய பருவமழை தொடங்கும் என அறிவித்துள்ளதால் இம்மாதத்தில் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.

    Next Story
    ×