search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தேனி அருகே குடும்ப பிரச்சினையில் 3 பேர் தற்கொலை

    தேனி அருகே குடும்ப பிரச்சினையில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்
    தேனி:

    தேனி அருகே கோட்டூரை சேர்ந்தவர் அறிவழகன் மனைவி அம்பிகா (வயது36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனால் மனமுடைந்த அம்பிகா விஷ மாத்திரை  தின்று மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அம்பிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே சின்ன ஓவுலாபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜா (27). கடந்த சில ஆண்டுகளாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவாரத்தை சேர்ந்தவர் சிவராமன் (40). இவர் கடந்த சில வருடங்களாக சென்னையில் டிரைவராக வேலை பார்தது வந்தார். குடி பழக்கத்திற்கு அடிமையானதால் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்த அவர் திடீரென வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×