என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    filephoto
    X
    filephoto

    கீழவேகுப்பட்டியில் மஞ்சுவிரட்டு

    கீழவேகுப்பட்டியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 7 பேர் காயமடைந்தனர். 

    கீழவேகுப்பட்டி ஏகானியம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி பெரிய கண்மாயில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 

    ஐநூறுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை  வாலிபர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அடக்கி மகிழ்ந்தனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 7 பேர் காயமடைந்தனர்.
    Next Story
    ×