என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ராஜபாளையத்தில் 2 மகள்களை கவனிக்க முடியாததால் தாய் தற்கொலை
Byமாலை மலர்1 Jun 2022 5:42 AM GMT (Updated: 1 Jun 2022 5:42 AM GMT)
குழந்தைகளை கவனிக்க முடியாமல் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் தெற்கு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் காளிகுரு (வயது 30) கொத்தனார். இவரது மனைவி சித்ரா(28) இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். காளிகுரு வெளியூருக்கு கட்டிட வேலைக்கு செல்வது வழக்கம். அவர் ஒருமாதம் வரை தங்கியிருந்து வேலை பார்த்துவிட்டு வருவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சித்ராவும் ராஜபாளையத்தில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இதனால் அவரால் தனது 2 மகள்களையும் சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை. இதுபற்றி அவர் பல முறை கணவரிடம் தெரிவித்தும் அவர் அதனை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த சித்ரா தனது 2 குழந்தைகளையும் அழைத்து சென்று திருப்பூரில் உள்ள அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு நேற்று ராஜபாளையம் வந்தார். பின்னர் அவரது வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதுபற்றி அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சித்ராவின் தம்பி மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த அவர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது சித்ரா சேலையில் தூக்குபோட்டு பிணமாக கிடப்பது தெரியவந்தது.
இதுபற்றி அவர் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சித்ரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். குழந்தைகளை கவனிக்க முடியாமல் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் தெற்கு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் காளிகுரு (வயது 30) கொத்தனார். இவரது மனைவி சித்ரா(28) இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். காளிகுரு வெளியூருக்கு கட்டிட வேலைக்கு செல்வது வழக்கம். அவர் ஒருமாதம் வரை தங்கியிருந்து வேலை பார்த்துவிட்டு வருவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சித்ராவும் ராஜபாளையத்தில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இதனால் அவரால் தனது 2 மகள்களையும் சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை. இதுபற்றி அவர் பல முறை கணவரிடம் தெரிவித்தும் அவர் அதனை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த சித்ரா தனது 2 குழந்தைகளையும் அழைத்து சென்று திருப்பூரில் உள்ள அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு நேற்று ராஜபாளையம் வந்தார். பின்னர் அவரது வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதுபற்றி அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சித்ராவின் தம்பி மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த அவர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது சித்ரா சேலையில் தூக்குபோட்டு பிணமாக கிடப்பது தெரியவந்தது.
இதுபற்றி அவர் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சித்ரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். குழந்தைகளை கவனிக்க முடியாமல் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X