என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நன்னடத்தையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்-போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
Byமாலை மலர்1 Jun 2022 5:23 AM GMT (Updated: 1 Jun 2022 5:23 AM GMT)
குற்ற வழக்குகளில் கைதானவர்கள் நன்னடத்தையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்-போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் இப்ராகிம் நகரைச் சோ்ந்தவா் முகமது ஜிப்ரி (வயது30). இவா் ஏற்கனவே பல வழக்குகளில் சிறை சென்றுள்ளாா். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நன்னடத்தை பிணைய பத்திரம் அளித்திருந்தாா்.
இந்த நிலையில் இவா் சித்தாா்கோட்டை சரவணகுமாா் (43) என்பவரை மிரட்டி கைப்பேசியைப் பறித்ததாக, சமீபத்தில் கைது செய்ய ப்பட்டாா். இவர் மீது ஏற்கனவே ஒரு ஆண்டுக்கான நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ள நிலையில், நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து ஜிப்ரி கைது செய்யப்பட்டுள்ளார்.இனிவருங்காலங்களிலும் இது போன்ற நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ள நபர்கள், நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X