என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோத்தகிரியில் தூய்மை பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்
Byமாலை மலர்31 May 2022 10:33 AM GMT (Updated: 31 May 2022 10:33 AM GMT)
கவுன்சிலரின் கணவர் அவதூறு பரப்பியதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.
அரவேணு,
கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 50-க்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகின்றனர்.
நேற்று இவர்கள் திடீரென வேைலநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில் ஒரு பெண் கவுன்சிலரின் கணவர் தூய்மை பணியாளர்கள் பற்றி முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் தவறான தகவல்களை பரப்பி அவதூறு பரப்பி வருகிறார்.
மேலும் பெண் பணியாளர்கள் பணி செய்யும் போது ஆய்வு செய்கிறேன் பேர்வழி என கூறிக் கொண்டு தொல்லை கொடுக்கிறார். இவ்வாறு தூய்மை பணியாளர்களை இழிவுபடுத்தி வரும் அந்த நபரை கைது செய்ய வேண்டும். மேலும் அவரது மனைவியின் வார்டு உறுப்பினர் பதவியை மாவட்ட நிர்வாகம் பறிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி னர். அதன்பேரில் போராட்ட த்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். தூய்மை பணியாளர்கள் தெரிவித்த தகவல்களை கொண்டு கோத்தகிரி போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கோத்த கிரியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X