என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடுமலை தாராபுரம் சாலையில் ஒளிரப்போகும் மின்விளக்குகள்
உடுமலை:
உடுமலை நகராட்சியின் நூற்றாண்டு நினைவாக உட்கட்டமைப்பு மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் ரூ. 48.87 கோடி நிதி ஒதுக்கீட்டில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நகரில் திருப்பூர் ரோடு, தளி ரோடு, எலையமுத்தூர் ரோடு, ராஜேந்திரா ரோடு, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு மற்றும் தாராபுரம் ரோட்டின் மையத்தடுப்புகளில் இரு புறமும் ஒளிரும் வகையில், தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், 5.91 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில் பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, அனுஷம் ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்குகள் ஒளிரச் செய்யப்படுகின்றன. அதேநேரம், தாராபுரம் ரோட்டில் மின் கம்பங்கள் அமைத்து விளக்குகள் பொருத்தப்பட்டாலும் அதற்கான தொகை மின்வாரியத்திற்கு செலுத்தப்படாமல் இருந்தது.
நீண்ட இழுபறிக்குப்பின் சமீபத்தில்அதற்கான தொகை நகராட்சியால் மின்வாரியத்திற்கு செலுத்தப்பட்டது. இதனால் அங்குள்ள மின் விளக்குகள் ஒளிர உள்ளன. மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், உரிய தொகை செலுத்தப்பட்டுள்ளதால் மின் இணைப்பு வழங்கி மின் விளக்குகள் ஒளிரச்செய்யப்படும்என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்