search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவன் சந்தோஷ்
    X
    சிறுவன் சந்தோஷ்

    தோல் நோய் சிகிச்சை உதவி-இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு

    கடந்த 16 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறேன்.பல்வேறு சிகிச்சை அளித்தும் சரி செய்ய முடியவில்லை.
    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் வினீத்திடம் தோல் நோய்க்கு உதவிடுமாறு சிறுவனும், இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி  பொதுமக்களும் இன்று மனு அளித்தனர். ஊத்துக்குளி வட்டம் காளப்பாளையத்தை சேர்ந்த சிறுவன் சந்தோஷ் என்பவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-  
    நான் பிறந்து சில மணி நேரங்களில் எனக்கு தோல் நோய் ஏற்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறேன்.  பல்வேறு சிகிச்சை அளித்தும் சரி செய்ய முடியவில்லை. 

    எனக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க வழி வகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவி்துள்ளார்.  திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரை சேர்ந்த தங்கம்மாள்  மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் , எங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு நகராட்சி அதிகாரிகள் ரூ1.60,000 கேட்கிறார்கள். நாங்கள் தினக்கூலிகள். 

    அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை. ஆகவே எங்களுக்கு அடுக்கு மாடிக்குடியிருப்பில் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×