என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சென்னை விமான நிலையத்தில் தொழிலாளி மர்ம மரணம்
Byமாலை மலர்30 May 2022 9:49 AM GMT (Updated: 30 May 2022 9:49 AM GMT)
சென்னை விமான நிலையத்தில் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் விமான நிலைய அத்தாரிட்டி கேண்டியன் உள்ளது. அதன் அருகே நேற்று இரவு, வாயில் நுரை தள்ளியபடி சுமார் 40 வயதுடைய ஆண் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இதையடுத்து அங்கு பணியிலிருந்த விமான நிலைய ஊழியர்கள், சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விமான நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் ரமேஷ்(40) என்பதும், சென்னை விமான நிலையத்தில் டிராலிகளை தள்ளும் வேலை செய்து வந்தது தெரியவந்தது.
இவருடைய உடலில் எந்த காயமும் இல்லை. அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இதேபோல் சென்னை விமான நிலையம் கார் பார்க்கிங் அருகே இந்த மாதம் கடந்த 7-ந் தேதி 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் உடலில் காயங்களோடு இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் விமான நிலைய அத்தாரிட்டி கேண்டியன் உள்ளது. அதன் அருகே நேற்று இரவு, வாயில் நுரை தள்ளியபடி சுமார் 40 வயதுடைய ஆண் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இதையடுத்து அங்கு பணியிலிருந்த விமான நிலைய ஊழியர்கள், சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விமான நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் ரமேஷ்(40) என்பதும், சென்னை விமான நிலையத்தில் டிராலிகளை தள்ளும் வேலை செய்து வந்தது தெரியவந்தது.
இவருடைய உடலில் எந்த காயமும் இல்லை. அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இதேபோல் சென்னை விமான நிலையம் கார் பார்க்கிங் அருகே இந்த மாதம் கடந்த 7-ந் தேதி 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் உடலில் காயங்களோடு இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X