என் மலர்
உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்ற போது எடுத்தப்படம்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே எரிச்சியில் பாரதப்பறவை அமைப்பின் சார்பில் நேற்று ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பாரதப் பறவைகள் என்ற அமைப்பு கடந்த 2007ம் ஆண்டு 7 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தொடங்கப்பட்டு தற்போது 140 இளைஞர் வரை இணைந்து செயலாற்றி வருகின்றனர்.
இதில் ஒவ்வொரு இளைஞராலும் மாதம் ரூ 100 வழங்கப்பட்டு, அது அமைப்பின் மூலம் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது.ஒரு கட்டத்தில் பெருந்தொகையாக சேர்ந்த பிறகு, அப்பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள், விதவைகள், பெற்றோர்களை இழந்து, வாழ்வாதாரமின்றி தவித்து வரும் மாணவ, மாணவியர்கள் போன்றோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் எரிச்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாற்றுத்திறனா ளிகளுக்கான மூன்று சக்கர வண்டி, தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, மாணவர்களுக்கான மிதிவண்டி, பசுமாடு மற்றும் வெள்ளாடுகள் வழங்கப்பட்டது.
மேலும் பனைவிதை நடுதல், மரக்கன்றுகள் நடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர்களும்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் முன்னதாக மாணவ மாணவிகள் கலந்து கொண்ட சிலம்பாட்டம் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
Next Story






