என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா

    புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 1060 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 2 பேர், ஏனாமில் 3 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    காரைக்கால், மாகியில் தொற்றால் பாதித்தவர் யாரும் இல்லை. தற்போது வரை கொரோனா தொற்று ஏற்பட்ட எவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை.

    புதுவையில் 12 பேர், ஏனாமில் 7 பேர் என மொத்தம் 19 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.புதுவையை சேர்ந்த 2 பேர், ஏனாமை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 3 பேர் குணமடைந்துள்ளனர். 

    புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 854 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில்  1 லட்சத்து 63 ஆயிரத்து 873 பேர் குணமடைந்துள்ளனர். 

    1962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×