என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் 1060 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 2 பேர், ஏனாமில் 3 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காரைக்கால், மாகியில் தொற்றால் பாதித்தவர் யாரும் இல்லை. தற்போது வரை கொரோனா தொற்று ஏற்பட்ட எவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை.
புதுவையில் 12 பேர், ஏனாமில் 7 பேர் என மொத்தம் 19 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.புதுவையை சேர்ந்த 2 பேர், ஏனாமை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 3 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 854 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 873 பேர் குணமடைந்துள்ளனர்.
1962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story






