என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தொழில் நுட்ப ஆலோசனை குழு மூலம் தமிழக ஜவுளித்தொழில் சிறப்பான வளர்ச்சி பெறும் - திருப்பூர் தொழில்துறையினர் பேட்டி

    ஜவுளித்துறைக்கான ஆலோசனை குழு அமைப்பது வரவேற்கத்தக்கது.

    திருப்பூர்:

    தமிழக துணி நூல் துறை அமைச்சர் காந்தி, மானிய கோரிக்கையில் அறிவித்தபடி ஜவுளி தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்படுகிறது. ஜவுளி தொழில் அமைப்பு பிரதிநிதிகள் 16 பேர் குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் என, பின்னலாடை நகரான திருப்பூரை சேர்ந்த நான்கு பேர் ஆலோசனைக்குழுவில் இடம்பெறுகின்றனர். விரைவில் இந்த குழு அமைக்கப்பட்டு செயல்பாட்டை துவக்க உள்ளது.

    இது சென்னையை தலைமையிடமாக கொண்டு அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிரந்தர குழுவாக இயங்கும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைக்கு ஏற்ப குழு கூடும். நூற்பாலை, ஆயத்த ஆடை, பின்னலாடை, தொழில்நுட்ப ஜவுளி என ஜவுளித்துறையின் பல்வேறு பிரிவுகள் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து, பிரச்னைக்குரிய தீர்வுகள், தொழில்நுட்ப ஆலோசனைகளை அரசுக்கு பரிந்துரைக்கும்.

    இது குறித்து பியோ தலைவர் சக்திவேல் கூறுகையில், ஜவுளித்துறை வளர்ச்சிக்கு தொழில்நுட்ப மேம்பாடு முக்கியமானதாக உள்ளது. தற்போது கூட, சுத்திகரிப்பு மைய கழிவு உப்புகளை அகற்றுவதற்கான தொழில்நுட்பம் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ஆலோசனை குழு மூலம் ஜவுளித்துறையின் தொழில்நுட்ப தேவைகளை, விரைவாகவும், நேரடியாகவும் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். குழுவின் ஆலோசனைகள், பரிந்துரைகளுக்கு அரசு செயல் வடிவம் கொடுக்கும். இதன்மூலம் நூற்பாலை முதல் ஆயத்த ஆடை தயாரிப்பு வரையிலான தமிழக ஜவுளித்தொழில் சிறப்பான வளர்ச்சி பெறும்.

    சைமா தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், அமைச்சர் அறிவித்தபடி, துரிதமாக, ஜவுளித்துறைக்கான ஆலோசனை குழு அமைப்பது வரவேற்கத்தக்கது. ஜவுளி தொழிலின் கஷ்ட, நஷ்டங்களை அன்றாடம் எதிர்கொண்டிருக்கும், ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ளோர், உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குழுவுக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பரிந்துரைகளை விரைந்து நிறைவேற்றி வைப்பதிலேயே, குழுவின் வெற்றி அடங்கியிருக்கிறது என்றார்.

    ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறுகையில், தமிழக அரசு முதல் முறையாக, தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவை அமைப்பது பாராட்டத்தக்கது. இந்த குழு மூலம், திருப்பூர் மீதான அரசின் கவனத்தை ஈர்க்கமுடியும். தொழில்நுட்பம் மட்டுமின்றி, உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழிலாளர் குடியிருப்பு, ஆய்வுக்கூடம் என எல்லா தேவைகளையும் படிப்படியாக நிறைவேற்ற முடியும்.

    துறை சார்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மத்தியில், ஜவுளித்துறை குறித்த புரிதல் மேலோங்கும். பட்ஜெட்டில், ஜவுளித்துறை வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டங்களை அறிவிப்பதற்கான வாய்ப்பு உருவாகும். ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு இது முதல் படி. இதே போல் மத்திய அரசும், ஜவுளித்துறைக்கான குழுவை அமைக்க வேண்டும்.

    Next Story
    ×