என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே வேன் முன்பு ஆட்டோ நிறுத்தியதை தட்டிக் கேட்ட தந்தை-மகனுக்கு கத்திகுத்து
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் முரசொலி மாறன் நகரை சேர்ந்தவர் வெங்கடரமணன் (60). நேற்று வெங்கட்ராமன் தனது உறவினர்களுடன் விடுமுறையை கொண்டாட ஊட்டிச் செல்வதற்காக வேன் ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த வேன் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வேனின் முன்பு ஆட்டோ ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்ட வெங்கட்ரமணன் அந்த ஆட்டோவை எடுக்குமாறு கூறினார்.
அப்போது அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த ரகு அவரது உறவினர் சண்முகம் ஆகியோர் அவருடன் தகராறு செய்து அவரை தாக்கினார்கள். இதைக் கண்டு தடுக்க வந்த வெங்கட்ராமனின் மகன் கார்த்திக் (47) என்பவரையும் அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கத்தியால் வயிறு மற்றும் கையில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் காயமடைந்த தந்தை மகன் 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நடந்த சம்பவம் குறித்து வெங்கட் ராமன் மணவாள நகர் போலீசில் புகார் செய்தார்.
மணவாளநகர் போலீசார் இதுகுறித்து ரகு, சண்முகம் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்