என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயிர்பலி வாங்க காத்திருக்கும் மூடப்படாத ஆழ்துளை கிணறு.
    X
    உயிர்பலி வாங்க காத்திருக்கும் மூடப்படாத ஆழ்துளை கிணறு.

    மூடப்படாத ஆழ்துளை கிணறு

    தேவகோட்டை நகரில் மூடப்படாத ஆழ்துளை கிணறால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
    தேவகோட்டை,

    நாட்டின் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து குழந்தைகள் இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. நவீன காலத்திலும் ஆழ்துளையில் விழும் குழந்தைகளை மீட்பது என்பது சிக்கலாக உள்ளது. எனவே அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி பயன் பாடில்லாத ஆழ்துளை கிணற்றை மூடவேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளது. 

    சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்துவரும் நகராட்சியான தேவகோட்டை நகரில் புதிதாக இடம் வாங்கி வீடு கட்டி வருகின்றனர். இந்த நிலையில் அருணகிரிபட்டினம் தெற்குத் தெருவில் வீட்டு மனை இடத்தில் புதிதாக வீடு கட்டி வரும் ஒரு நபர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த போர்வெல் நிறுவனத்திடம் ஆழ்துளை கிணறு அமைக்க பணியினை கொடுத்துள்ளார். அங்கு ஆழ்குழாய் கிணறு பணிகள் முடிவுபெறும் தருவாயில் இருக்கும்போது இடத்தின் உரிமையாளர் வந்து பார்த்த போது ஆழ்துளை கிணறு போடப்பட்ட இடம் அடுத்தவர் இடத்தில் உள்ளதால் அதிர்ச்சி அடைந்தார். 

    உடனே போர்வெல் நிறு வனம் 200 அடி ஆழத்திற்கு மேல் அந்தப் பணியை அப்படியே விட்டுவிட்டு குறிப்பிட்ட இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து பணியை நிறைவு செய்தனர். 

    ஆனால் தவறாக போர்வேல் போட்ட இடத்தினை மூடாமல் அப்படியே விட்டுச் சென்றது. இதுகுறித்து உரியவர்களிடம் தெரிவித்தும் ஆழ்துளை கிணறு மூடப்படவில்லை. 

    குழந்தைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் மூட ப்படாத ஆழ்துளை கிணற்றால் உயிர்பலி விபத்து விபத்து ஏற்படும் முன் கலெக்டர் நேரடி விசாரணை நடத்தி ஆழ்துளை கிணற்றை மூட நடவடிக்கை எடுப்பதோடு சம்பந்தப்பட்ட போர்வெல் நிறுவனம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×