என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திண்டுக்கல் மாவட்டத்தில் 200 இடைநின்ற மாணவிகளை பள்ளியில் சேர்த்த காவல் அதிகாரி
Byமாலை மலர்28 May 2022 6:03 AM GMT (Updated: 28 May 2022 6:03 AM GMT)
திண்டுக்கல் மாவட்டத்தில் 200 இடைநின்ற மாணவிகளை பள்ளியில் சேர்த்த காவல் அதிகாரி லாவண்யாவுக்கு பாராட்டு
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவு நூற்பாலைகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் இளம்வயது தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நாட்டையே உலுக்கிய கொரோனா ஊரடங்கின்போது தொழில்கள் அனைத்தும் முடங்கின.
நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் பெரும்பாலான மாணவிகள் பள்ளிக்கு வராத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பள்ளிகள்தாறும் ஆய்வு செய்தபோது கல்வியை இடைநிறுத்தி அவர்கள் மில்கள் மற்றும நூற்பாலைகளில் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது. மீண்டும் பள்ளிக்கு செல்வோம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து திண்டுக்கல் ஏ.எஸ்.பி லாவண்யா முயற்சியின் பேரில் இடைநின்ற மாணவிகள் கணக்கெடுக்கப்பட்டனர். பல்வேறு காரணங்களால் இடைநின்ற 200 மாணவிகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருகின்றனரா என்பதும் கண்காணிக்கப்பட்டது. அதன்படி தொடர்ந்து மாணவிகள் கல்வி கற்பதை உறுதி செய்து வரும் ஏ.எஸ்.பி லாவண்யாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு மாணவிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து
அறிந்து கொள்வதுடன் அதற்கான தீர்வுகளையும் தெரிவித்து வருகிறார்.
இதுமட்டுமின்றி பாலியல் தொந்தரவுகளில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும், குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து தொடர்பு கொள்ளவேண்டிய அதிகாரிகள், செல்போன் எண்கள் குறித்தும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு மாணவிகள் மட்டுமின்றி பெற்றோர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X