search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீயில் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கும் கார்.
    X
    தீயில் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கும் கார்.

    அருப்புக்கோட்டை அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

    அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை போராடி அணைத்தனர்.
    பாலையம்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பீர்முகமது(வயது 34). வாடகை கார் டிரைவர். இவர் நேற்று வாடகை காரில் பாலக்காடு சென்றுவிட்டு பயணியை இறக்கிவிட்டு மீண்டும் காயல்பட்டிணம் திரும்பிக் கொண்டிருந்தார்.

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வந்து கொண்டிருக்கும்போது தூக்கம் வந்ததால் மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலை கஞ்சநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே காரை ஓரமாக நிறுத்திவிட்டு பீர்முகமது காரில் தூங்கியுள்ளார். அப்போது திடீரென காரில் இருந்து புகை கிளம்பி தீ பிடித்தது.

    இதில் சுதாரித்துக்கொண்ட பீர்முகமது உடனடியாக காரில் இருந்து வெளியேறி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள் கார் முழுவதும் தீ பரவியது.

    அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை போராடி அணைத்தனர்.

    ஆனால் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது. இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×