என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குறைந்த விலையில் தங்கம் தருவதாக மோசடி - இடைத்தரகர் கைது
Byமாலை மலர்27 May 2022 9:40 AM GMT (Updated: 27 May 2022 9:40 AM GMT)
வேதாரண்யத்தில் குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி ரூ.96 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் குறைந்த விலையில் ஒரு கிராமிற்கு 400 ரூபாய் குறைத்து தங்கம் வாங்கித் தருவதாக சின்ன சேலத்தைச் சேர்ந்த இடைத்தரகர் தியாகு என்பவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் முருகன் வயது 47 என்பவரிடம் பேசி வேதாரண்யம் அருகே உள்ள கருப்பம்புலம் கிராமத்தைச் சேர்ந்த பண்டரிநாதன் (வயது 65) என்பவரிடம் பேசி உள்ளனர்.
அவரும் உடனே வாருங்கள் பணம் கொண்டு வாருங்கள் என கூறியுள்ளார்.இந்த வார்த்தையை நம்பி கள்ளக்குறிச்சி நகைக்கடை அதிபர் முருகன் இடைத்தரகர் தியாகு மற்றும் சிலர் 96 லட்சம் பணத்துடன் கருப்பம்புலம் வந்தனர் அவர்களிடம் பண்டரிநாதன் 860 கிராம் தங்க கட்டியை கொடுத்துவிட்டு 96 லட்சத்தை முருகனிடம் இருந்து பெற்றுக் கொண்டார். மீதி தங்கம் நாளை மறுநாள் தருவதாக கூறி அனுப்பி விட்டார்.
முருகனை பண்டரிநாதன் உட்பட பலர் பல ஊரைச் சார்ந்த 7 பேர் பின் தொடர்ந்து சென்று முருகனின் காரை வழிமறித்து தாக்கி நகைகளை பறித்துக் கொண்டனர். முன்கூட்டியே சுதாரித்த கள்ளக்குறிச்சி முருகன் தான் பெற்ற 860 கிராம் தங்க கட்டியை வேறு நபரிடம் கொடுத்து அனுப்பி விட்டார்.
அதனால் இந்த மோசடிக்காரர்கள் இடமிருந்து தப்பியது. இதனால் பாதிக்கப்பட்ட முருகன் இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் புகார் செய்து உள்ளார் புகாரின் பெயரில் போலீஸ் துணை கண்காணிப்பாளர் முருகவேல், இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் தனிப்படையினர் வழக்குப்பதிவு செய்து பண்டரிநாதன் உட்பட 7 பேரை கைது செய்து இந்த மோசடிக்கு பயன்படுத்திய நான்கு சொகுசு கார்கள் ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் தலைமறைவாக இருந்த இடைத்தரகர் சின்ன சேலத்தைச் சேர்ந்த தியாகு (47) என்பவரை தேடிவந்தனர் இந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தோப்புத்துறை சோதனைச் சாவடி அருகே பஸ்ஸில் ஏறுவதற்காக மறைந்திருந்த தியாகுவை பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்பு சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X