என் மலர்
உள்ளூர் செய்திகள்

நேரு சிலைக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.
நேரு சிலைக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் மாலை
நேரு சிலைக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு நாள் அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது.
கடற்கரை சாலை காந்தி திடலில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமி காந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி, வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்தி கேயன், நீலகங்காதரன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவர் வீரமுத்து, ரகுமான், இளையராஜா உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மல ர்களால் அலங்கரிக்கப்பட்ட நேரு உருவப்படத்துக்கும் அஞ்சலி செலுத்தினர்.
அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் சார்பில் நேரு நினைவு தினத்தையொட்டி அரியாங்குப்பம்-வீராம்பட்டிணம் சாலை சந்திப்பில் நேரு உருபடம் அலங்கரித்து வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் பொது ச்செயலாளர் சங்கர், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அய்யப்பன், சிவராமகிருஷ்ணன், மீனவர் பிரிவு காங்கேயன், பி.சி.சி. அன்புமணி மற்றும் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






