search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கொள்ளை
    X
    கொள்ளை

    கருமத்தம்பட்டி அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

    பள்ளி விடுமுறை என்பதால் அனைவரும் அவர்களது சொந்த ஊரான சென்னைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்று விட்டனர்.
    கருமத்தம்பட்டி:

    கருமத்தம்பட்டி அருகே உள்ள வேட்டைக்காரன் குட்டை பகுதியில் வசித்து வருபவர் சங்கர் மூர்த்தி (49). 
     
    சென்னையை சேர்ந்த இவர் கடந்த 4  வருடங்களாக கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள வேட்டைக்காரன் குட்டை பகுதியில்  வாடகை வீட்டில் தனியார்  சைசிங்கில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். 

    இவரது மனைவி  மற்றும் மகள் ஆகியோர் பள்ளி விடுமுறை என்பதால் அவரது சொந்த ஊரான சென்னைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்று விட்டனர். சங்கர்மூர்த்தியும் வெளியூர் சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார். 

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.  தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  போலீசார் விசாரணை நடத்தினர்.  
      
    அப்போது  வீட்டினுள் இருந்த பிரோவில் வெள்ளி பொருட்கள் சுமார் 1¼ கிலோ, தங்கம் 3 கிராம் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து சங்கரமூர்த்தி அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
     
    கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் ஜன்னல், கதவு செய்ய ஒர்க் ஷாப் முன்பு போடப்பட்டிருக்கும் இரும்பு பொருள்கள் மற்றும் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து திருடுவது,  செல்போன் பறிப்பு மற்றும் நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு போன்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து  நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 

    இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×