search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வடவள்ளியில் கள்ளக்காதலி வீட்டில் டாக்சி டிரைவர் தற்கொலை

    கிருஷ்ணனுக்கு கோவை வடவள்ளி அருகே உள்ள நாகராஜபுரத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் சத்யா என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
    வடவள்ளி:

    திருப்பூர் மாவட்டம் காளம்பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 39). டாக்சி டிரைவர். 
     
    இவருக்கு திருமணமாகி அமுதகனி என்ற மனைவி உள்ளார். இந்தநிலையில் கிருஷ்ணனுக்கு கோவை வடவள்ளி அருகே உள்ள நாகராஜபுரத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் சத்யா என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    கடந்த 23-ந் தேதி கிருஷ்ணன் தனது காரில் நாகராஜபுரத்தில் உள்ள கள்ளக்காதலி வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்கே தங்கி இருந்தார். நேற்று மதியம் 1 மணியளவில் கள்ளக்காதலி சத்யா கிருஷ்ணனின் மனைவியை  செல்போனில் தொடர்பு கொண்டார். 

    அப்போது உனது கணவர் எனது வீட்டில் உடல் நிலை சரியில்லாமல் உள்ளார். எனவே வந்து அழைத்து செல்லும்படி கூறினார். பின்னர் அவரே தனியார் ஆம்புலன்சில் கிருஷ்ணனை கொண்டு சென்று அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு அமுதகனி தனது கணவரை பார்த்த போது அவர் இறந்து இருந்தார்.

     இது குறித்து அவர் சத்யாவிடம் கேட்ட போது நான் உணவு சமைத்துக்கொண்டு இருந்தேன். அப்போது கிருஷ்ணன் விளையாட்டாக நான் தூக்கு போட்டு தற்கொலை செய்ய போகிறேன் என்று கூறினார். நான் விளையாட்டாக தானே கூறுகிறார் என்று நினைத்தேன். 

    ஆனால் அவர் உண்மையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் உடல் நிலை சரியில்லை என்று கூறி ஆம்புலன்சில் எடுத்து வந்தேன் என கூறினார்.

    இதனையடுத்து அமுதகனி இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×