search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த திருநங்கை தற்கொலை

    பெற்றோரை பிரிந்து 5 திருநங்கைகளுடன் வசித்து வந்தார். அனைவரும் சமையல் வேலை செய்து வந்தனர்.
    கோவை:

    கோவை தொண்டா முத்தூர் அருகே உள்ள வாஞ்சியம்மன் நகரை சேர்ந்தவர் அபர்னா என்ற விக்னேஷ் (வயது 26). திருநங்கை.

    இவர் தனது பெற்றோரை பிரிந்து 5 திருநங்கைகளுடன் வசித்து வந்தார். அனைவரும் சமையல் வேலை செய்து வந்தனர். 

    கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அபர்னா உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. மேலும் வயிற்று வலி, உடல் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அபர்னா கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த சக திருநங்கைகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட திருநங்கை அபர்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.    
    Next Story
    ×