என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    வீட்டில் தூங்கிய தாய், மகளிடம் நகை திருட்டு

    வீட்டில் தூங்கிய தாய், மகளிடம் நகையை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாங்காடு ஊராட்சி மனப்புஞ்சை செட்டியார் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கலா (வயது 55), மகள் தீபா (27), இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது,

    வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் கலா அணிந்திருந்த 11 பவுன் சங்கிலி, தீபா அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனராம். இச்சம்பவம் குறித்து வந்த வடகாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×