search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டசபையில் ஆம்புலன்ஸ் சேவையை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்த காட்சி.
    X
    சட்டசபையில் ஆம்புலன்ஸ் சேவையை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்த காட்சி.

    சுகாதாரத்துறைக்கு 13 ஆம்புலன்ஸ்கள் ரங்கசாமி வழங்கினார்

    புதுவை சுகாதாரத்துறைக்கு 13 ஆம்புலன்ஸ்கள் ரங்கசாமி அர்ப்பணித்தார்
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறைக்கு ரூ. 1 கோடியே 75 லட்சம் செலவில் 4 பெரிய ஆம்புலன்ஸ், 9 சிறிய ஆம்புலன்ஸ்களும் வாங்கப்பட்டுள்ளது.

    ஆக்சிஜன் உள்பட ரூ.8 லட்சம் செலவில் நவீன மருத்துவ முதல் உதவி கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆம்புலன்களை சுகாதாரத்துறையிடம் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி சட்டமன்ற வளாகத்தில் நடந்தது. 

    முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆம்புலன்ஸ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சபநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 

    புதுவை அரசு மருத்துவ மனைக்கு 2, காரைக்காலுக்கு 1, ஏனாமுக்கு 1 என 4 பெரிய ஆம்புலன்ஸ்களும், அரசு மருத்துவமனைக்கு 6, காரைக்காலுக்கு 2, ஏனாமுக்கு 1 என 9 சிறிய ஆம்புலன்சுகளும் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்த ஆம்புலன்ஸ்கள் ஆரம்ப சுகாதார நிலை யங்களில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.

    Next Story
    ×