என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சார்பதிவாளர் அலுவலகத்தை மீண்டும் திறக்க பொதுமக்கள் கோரிக்கை

    தலைஞாயிறில் சார்பதிவாளர் அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறில் 1982 ஆம் ஆண்டு சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகம் 17 கிராமத்துடன் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு தலைஞாயிறு சார்பதிவாளர் அலுவலகம் மூடப்பட்டது. 

    10 கிராமங்கள் திருப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்க ப்பட்டது. இதனால் தலைஞாயிறு கிராமத்தில் உள்ளவர்கள் வில்லங்கச் சான்று, பத்திர நகல் எடுக்க, பிறப்பு இறப்பு பதிவு செய்ய அலைய வேண்டியுள்ளது.

    எனவே தலைஞாயிறு பகுதி பொதுமக்கள் நலன்கருதி பத்திரப்பதி வுகாக அலைக்கழிக்கபடுவதை தவிர்க்கும் பொருட்டு தலைஞாயிறில் 19 ஆண்டு களாக மூடப்பட்ட சார்பதி வாளர் அலுவல கத்தை மீண்டும் திறக்க வேண்டும். இது தொடர்பாகஒன்றியக் குழு கூட்டத்தில் நிறைவே ற்றப்பட்ட தீர்மானத்தை அரசு அமல்படுத்த வேண்டுமென தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி கோரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×