search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு
    X
    கொரோனா தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு

    காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்- கொரோனா தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந் தேதி மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
    காஞ்சிபுரம் :

    காஞ்சிபுரம்  மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம்  மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.

    இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கலெக்டர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் ஆதார் அட்டை, சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேஷன் கார்டு நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-1, இணையவழி சிறு/குறு விவசாய சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், நிலத்தின் பரப்பளவு-பட்டா நகல் ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பதிவு செய்யலாம்.

    மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல் காண்பித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கலெக்டர் ஆர்த்தி அறிவித்து உள்ளார்.
    Next Story
    ×