search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    ஜெ.குருவின் வீரத்தை நெஞ்சில் நிறுத்துவோம்- ராமதாஸ் டுவிட்டர் பதிவு

    மாவீரன் ஜெ.குருவின் தியாகத்தையும், வீரத்தையும் நாம் நெஞ்சில் நிறுத்துவோம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    என் நெஞ்சில் குடியிருக்கும், என் அன்புக்குரிய மாவீரன் ஜெ.குருவின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்று. கட்சிக்காகவும், சமூகத்திற்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகள், அதிரடி நடவடிக்கைகள் தான் நினைவுக்கு வருகின்றன. மாவீரனின் தியாகத்தையும், வீரத்தையும் நாம் நெஞ்சில் நிறுத்துவோம்.

    காடுவெட்டியில் உள்ள நினைவு மண்டபத்திலும், திண்டிவனம் கோனேரி குப்பத்தில் கல்விக்கோயில் வளாகத்தில் உள்ள மாவீரனின் உருவச்சிலைக்கும் அங்குள்ள பராமரிப்பாளர்கள் மூலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த நாளில் அனைவரும் அவரது நினைவை போற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×