search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவை அருகே அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு

    போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையம் பிரஸ் காலனி குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.
     
    இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த,  ஒருவர் துர்நாற்றம் வந்த பகுதிக்கு சென்று பார்த்தார்.

    அப்போது அங்கு அவர் கண்ட காட்சி அவரை நடுநடுங்க வைத்தது. வாலிபர் ஒருவரின் உடல் தலையில்லாமல் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்ததும் பதறி போன அவர் உடனடியாக சம்பவம் குறித்து, பெரிய நாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
     
    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை பார்வையிட்டனர். அப்போது வாலிபரின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. 

    மேலும் அவரது உடலில் தலை மட்டும் தனியாக கிடந்தது. இறந்து கிடந்தவருக்கு 45 முதல் 50 வயது வரை இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் அவர் இறந்து ஒரு மாதத்திற்கும் மேலாக இருக்கலாம் என்றும், இதனால் உடல் மிகவும் அழுகிய நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து அவர் யார் என்பதை அறிய உடல் அருகே ஏதாவது தடயங்கள் கிடக்கிறதா என தேடி பார்த்தனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்றும் இதுவரை தெரியவில்லை.

    இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்து கிடந்தவர் யார்? அவர் தற்கொலை செய்து கொண்டரா அல்லது யாராவது மது அருந்த அழைத்து வந்து அடித்து கொன்று விட்டு உடலை அப்படியே இங்கு போய்விட்டனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    Next Story
    ×