என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மேட்டுப்பாளையம் அருகே சாலையோரம் நின்ற காரில் அரசு பள்ளி ஆசிரியர் பிணமாக மீட்பு
Byமாலை மலர்25 May 2022 9:47 AM GMT (Updated: 25 May 2022 9:47 AM GMT)
ஊட்டியை சேர்ந்த ரஞ்சித்(40) என்பதும், கூடலூர் மண்ணுத்துவயல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
சிறுமுகை:
ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் கல்லார் அடுத்த தூரிப்பள்ளம் அருகே இன்று காலை வெகு நேரமாக கார் ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்தது. யாராவது சுற்றுலா பயணிகள் காரை நிறுத்தி விட்டு சென்றிருக்கலாம் என்று நினைத்தனர்.
ஆனால் வெகுநேர மாகியும் யாரும் காரை எடுக்க வரவில்லை. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கும், அப்பகுதி மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் காரின் அருகே சென்று பார்த்த போது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.இதை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்க தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரை பார்த்தனர். அப்போது காரில் வாலிபர் நாக்கை கடித்தபடி இறந்த நிலையில் கிடந்தார். அவர் இறந்து 2 நாட்கள் இருக்கலாம் என சந்தேகித்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் யார்? என்பதை கண்டறிய காரில் ஏதாவது இருக்கிறதா என தேடி பார்த்தனர்.
அப்போது, காரில் ஆதார் கார்டு ஒன்று கிடந்தது. அதை வைத்து விசாரித்ததில் அவர் ஊட்டியை சேர்ந்த ரஞ்சித்(40) என்பதும், கூடலூர் மண்ணுத்துவயல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரது உறவினர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மேட்டுப்பாளையம் விரைந்துள்ளனர். அவர்கள் வந்த பின்னர், அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
மேலும் இறந்தவர் தற்கொலை செய்து கொண்டரா? அல்லது யாராவது கொலை செய்து உடலை கொண்டு வந்து போட்டு சென்றனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X